செய்திகள் :

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

post image

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக அன்றைய தினமே 110 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஈரானில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிப்பதுடன் மூன்று விமானங்கள் மூலம் 1,000 இந்தியர்களை மஷாத் நகரில் இருந்து இந்தியாவுக்கு அனுப்புவதாக ஈரான் தெரிவித்தது.

இதையடுத்து, 290 இந்தியர்களுடன் முதல் விமானம் ஈரானில் இருந்து 20-ஆம் தேதி புது தில்லி வந்தடைந்தது. 310 இந்தியர்களுடன் இரண்டாவது விமானமும் மற்றொரு விமானமும் சனிக்கிழமை வந்தடைந்தது.

மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 292 இந்தியர்கள் இன்று(ஜூன் 24) புதுதில்லி வந்தடைந்தனர். இதுவரை ஈரானில் இருந்து 2,295 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரானுடனான மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது. விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம் இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின்கீழ் முதல்முறையாக இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டு முதல் விமானம் மூலம் 161 பேர் இன்று(ஜூன் 24) புதுதில்லி வந்தடைந்தனர்.

இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்டுள்ள 161 இந்தியர்களும் சாலை வழியாக இஸ்ரேல்-ஜோர்டான் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு நுழைவுஇசைவு (விசா) உள்பட பயணம் மேற்கொள்வது தொடர்பான நடைமுறைகள் நிறைவடைந்த பின்பு அவர்கள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அம்மானில் இருந்து அவர்கள் தாயகம் திரும்புவதற்காக சிறப்பு விமானங்களை செய்யப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் 161 இந்தியர்கள் புதுதில்லி வந்தடைந்தனர்.

இதையும் படிக்க: போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாயில் சுமார் 1 கோடி) நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியக் கொள்கை; உலகிற்கு எடுத்துரைத்த ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதர் மோடி கலந்... மேலும் பார்க்க

கேதாரேஷ்வர் குகைக் கோயில் தூண்கள் பற்றிய மர்மம் உண்மையா? உலக அழிவை சொல்லுமா?

மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகைக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். சஹ்யாத்ரி மலையின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாகத் த... மேலும் பார்க்க

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் நாட்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி வழக்கு!

பாதுகாப்பு தணிக்கைகள் முடியும்வரை ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு தற்காலிக தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிக... மேலும் பார்க்க

ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றி... மேலும் பார்க்க