செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?

post image

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டு இருநாட்டு ராணுவங்களும் முக்கிய நகரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தின.

அதில், இந்திய ராணுவத்தின் கட்டமைப்புகள் மீது பாகிஸ்தான் சுமார் 300 - 400 ட்ரோன்களின் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களுக்கு, துருக்கியில் தயாரிக்கப்பட்ட ராணுவ ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில், பாகிஸ்தானுக்கு உதவி வந்த துருக்கி ராணுவ நிபுணர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பாகிஸ்தான் - துருக்கி ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடந்த சில காலமாக அதிகரித்து காணப்படுகிறது. ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

மேலும், துருக்கி அரசு பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைத்தது மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

இத்துடன், ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும் என கர்னல் சோஃபியா குரேஷி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! - சிவசேனை

மும்பை: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) அறிவித்துள்ளது.மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி வகிக்கும் அம்மா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 15) தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையா... மேலும் பார்க்க

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தக் கோரிய டிரம்ப்!

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்ட... மேலும் பார்க்க

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக பதவியேற்றார் அஜய் குமார்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் பதவியேற்றுக்கொண்டார். மேலும் பார்க்க

குழாய் மூலம் எரிவாயு திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்: ரேகா குப்தா

தில்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். துவாரகாவில் நடந்த விழாவில் தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார்... மேலும் பார்க்க