செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!

post image

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவுள்ளதாக அந்நாட்டில் வதந்தி பரவியது. இதனையடுத்து, பாகிஸ்தானில் ஒருமணி நேரமாக வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக, கராச்சி பங்குச் சந்தை (KSE 100), வியாழக்கிழமையில் 6,948.73 புள்ளிகள் குறைந்து (6.32%) சரிவுடன் முடிவடைந்தது.

சிமெண்ட், எரிசக்தி, வங்கி, தொழில்நுட்பம் போன்ற முக்கிய பங்குகளின் எதிர்மறை விளைவுகளினால் பாகிஸ்தான் பங்குச் சந்தை சரிவடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இன்றுமுதல் (மே 8) 60 நாள்களுக்கு விலைமதிப்பற்ற உலோகங்கள், நகைகள், கற்கள் (Gemstones) போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியதால், இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தானில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களின் பங்குகளை திரும்பப் பெற்றதால், அந்நாட்டு பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, தனது அந்நியச் செலாவணி இருப்புகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, மேற்கு ஆசியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுமெனில், அவற்றில் 90 சதவிகித பரிமாற்றம் இந்தியாவைச் சேர்ந்த பரிமாற்ற நிறுவனங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நீடித்தால், இந்த நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அல்லது ப... மேலும் பார்க்க

தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி

தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின.தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்... மேலும் பார்க்க

தாயகத்தை விட்டு வெளியேறினார் வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்!

வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் அவரது தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற ... மேலும் பார்க்க

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9... மேலும் பார்க்க

புதிய போப் தேர்வு: முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை!

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரண... மேலும் பார்க்க

லாகூரில் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்? பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!

லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து, லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.பாக... மேலும் பார்க்க