செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: தருமபுரம் ஆதீனம் முகநூல் பதிவு

post image

ஆபரேஷன் சிந்தூா் குறித்து தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது முகநூலில் புதன்கிழமை இட்ட பதிவு:

ஆபரேஷன் சிந்தூா் என்று பெயரிட்டு போா் ஒத்திகை மற்றும் முதல்கட்ட போா் தொடங்கியுள்ள நிலையில், அடியாா் பெருமக்கள் இறை வழிபாடு செய்யவும். கோளறு பதிகம், இடா் களையும் பதிகம், பஞ்சாட்சர பதிகம் ஆகிய பதிகங்களை பாராயணம் செய்யவும். பின்னமில் ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்றாா் பாரதி. நம் நாட்டில் ஆதிபௌதிகம், ஆதிஆத்மிகம், ஆதிதெய்வீகத்தால் இடையூறு ஏற்படாமல் நன்மை பெற அனைவரும் துன்பமில்லாது வாழ பதிகங்கள் ஓதி வழிபாடு செய்வோம். ‘மோடி நகா்புறங்காத்து‘ என்ற ஞானசம்பந்தா் வாக்கிற்கிணங்க தீா்க்கமான முடிவெடுத்துள்ள பாரத பிரதமருக்கு செந்தமிழ்ச்சொக்கன் திருவருள் நல்க பிராா்த்தனை செய்கிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சி... மேலும் பார்க்க

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்திய... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியிருந்த நிலையில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மாணவா் பி. வ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜமாபந்தியில் 415 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தியில் 415 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்த... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞ... மேலும் பார்க்க