செய்திகள் :

ஆப்கானிஸ்தான்: பெண்கள் வானொலி நிலையத்தை இடைநிறுத்திய தலிபான்கள்!

post image

ஃப்கானிஸ்தானில் இயங்கி வந்த ஒரே பெண்கள் வானொலி நிலையத்தை இடைநிறுத்தம் செய்ததாக தலிபான் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பெண்களை அதிகமாக ஒடுக்கி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலுள்ள 'பேகம்' பெண்கள் வானொலி நிலையத்தில் சோதனையிட்டவர்கள், அதன் செயல்பாட்டையும் இடைநிறுத்தியுள்ளனர்.

Begum Radio

காபூலில் செயல்பட்டு வந்த 'பேகம் ரேடியோ நிலையம்' பெண் கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தது. ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கல்வி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. பெண்களால் நடத்தப்படும் இந்நிலையத்தின் தரவுகள் அனைத்தும் ஆப்கானிய பெண்களால் தயாரிக்கப்பட்டது. இந்த வானொலி நிலையத்தின் செயற்கைக்கோள் சேனலான பேகம் டிவி, ஃபிரான்சிலிருந்து இயங்குகிறது. பேகம் வானொலி நிலையம் வெளிநாட்டு ஊடகங்களோடு பணிபுரிந்ததாகக் கூறி தலிபான் அதிகாரிகள் ரேடியோ நிலையத்தை இடைநிறுத்தம் செய்திருப்பது அந்நாட்டு ஊடகங்களின் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து X சமூக வலைதளத்தில், பேகம் வானொலி வெளிநாட்டு தொலைக்காட்சி நிலையத்துக்கு தரவுகள் வழங்கி விதி மீறல் செய்திருக்கிறது. அதனால், அதன் இயக்கத்தை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தலிபான் தகவல் அமைச்சகம் பதிவிட்டுள்ளது.

தலிபான்

பேகம் ரேடியோ நிலையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரேடியோ நிலையத்தின் பெண் ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களிடமிருந்தும் தாலிபன் அதிகாரிகள் கணினி, ஹார்டு டிரைவ், தொலைபேசி, கோப்புகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். தவிர, இரண்டு ஆண் ஊழியர்களையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் கல்வியையும் ஆதரவையும் மட்டுமே வழங்கினோம்' என்று கூறப்பட்டுள்ளது. பொதுவெளியில் பெண்கள் பாடுவதற்கும் சத்தமாக வாசிப்பதற்கும் தடைவிதித்துள்ள தலிபான் அரசு, பெண் கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்த வானொலியை இடை நிறுத்தம் செய்திருப்பது, அந்நாட்டின் பெண்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Adani மகன் `ஜீத் அதானி' பெயரில் போலி 'வரன் கணக்கு' -ஷாக் ஆன shaadi.com CEO

சமீபத்தில் ஷார்க் டேன்க் இந்தியா நிகழ்ச்சியில் தோன்றிய அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, அவரது வருங்கால மனைவியான திவா ஷாவை எப்படிச் சந்தித்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.அதானி ஏர்போர்ட் இயக்குநரான ... மேலும் பார்க்க

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கு... மேலும் பார்க்க

Japan: வேண்டுமென்றே தவறு செய்து, மீண்டும் மீண்டும் ஜெயிலுக்கு போகும் முதியவர்கள்! - பின்னணி என்ன?

ஜப்பானில் வசிக்கும் வயதானவர்கள் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஜப்பானில் டோக்கியோவிற்கு வடக்கே பெண்க... மேலும் பார்க்க

`உப்புமாவுக்கு பதில் பிரியாணி தரணும்'- சிறுவனின் கோரிக்கையும் கேரள அரசின் பதிலும்

அங்கன்வாடியில் உப்புமாவிற்கு பதில் பிரியாணியும் சிக்கனும் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.கேரளாவில் அங்கன்... மேலும் பார்க்க

Divorce Temple: திருமண உறவை முறித்து கொள்ள தம்பதிகள் செல்லும் `விவாகரத்து கோயில்'- எங்கே இருக்கிறது?

கோயிலுக்குச் சென்றால் திருமணம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கோயிலுக்குச் சென்றால் விவாகரத்து நடக்குமாம். ஜப்பானில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு "விவாகரத்து கோயில்" என்று பெயர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் துறவறம் பூண்ட நடிகை மம்தா குல்கர்னி அகாரா மடத்தில் இருந்து நீக்கம்..! பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடந்து வர... மேலும் பார்க்க