செய்திகள் :

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று(ஆக. 25) ஞாயிற்றுக்கிழமை துறையூர் பேருந்து நிலைய பகுதிக்கு அவர் வந்தார். அவர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அதிமுக கூட்டத்துக்குள் நுழைந்த 108 ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி அதிலிருந்த பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாகனத்துக்குள் நோயாளி இருக்கிறாரா என அதிமுகவினர் சோதனை செய்தனர். அப்போது நோயாளி இல்லாததை பார்த்ததும், ஆத்திரமடைந்து கூச்சலிட்ட அதிமுகவினரிடம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நோயாளியை ஏற்றுவதற்காக செல்வதாக கூறியும் அதிமுகவினர் சமாதானம் அடையவில்லை.

அப்போது, ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!

A case has been registered against 14 AIADMK members in connection with the incident where an ambulance was stopped and the driver of the ambulance was attacked at a campaign rally of AIADMK General Secretary Edappadi Palaniswami.

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கின்போது விஜய்யை சந்திக்கச் சென்ற இளைஞரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான விடியோ குறித்து அந்த இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மா... மேலும் பார்க்க

நீங்கா நினைவில் வாழும் அண்ணன்... விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து!

மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 25) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ. 5.10 கோடி செலவில் முழு அளவில்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவ... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஆகஸ்ட் 27, 28ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி ந... மேலும் பார்க்க