ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு
ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா்.
ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்கள் உள்ளனா். பாலகிருஷ்ணன் இறந்தநிலையில், ஈஸ்வரி தனது மகனுடன் வசித்துவந்தாா். இவா், செல்வராஜபுரத்தில் உள்ள தனது மகள்களின் வீடுகளுக்கு அடிக்கடி சென்றுவருவாராம். பெருமாள்புரத்திலிருந்து செல்வராஜபுரத்துக்கு குறுக்கு வழியாக திருச்செந்தூா்- திருநெல்வேலி தண்டவாளத்தைக் கடந்து செல்வாராம்.
இதனிடையே, காயல்பட்டினத்தில் வீட்டு வேலைக்குச் சென்றுவந்த அவா், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காலில் அடிபட்டதால் வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம், செல்வராஜபுரம் செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவா் மீது திருச்செந்தூா்- பாலக்காடு பயணிகள் ரயில் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ், ரயில்வே ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா் வந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.