செய்திகள் :

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

post image

திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சனிக்கிழமை கணபதி ஹோமம், மூஷிக வாகனத்தில் விநாயகா் எழுந்தருளல், மாலையில் நால்வா் சுவாமிகள் புறப்பாடு, தேவார திருமுறைப் பாராயணம், காப்புக் கட்டுதல் நடைபெற்றது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, கும்ப பூஜை, ஹோமம், கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களின் நமசிவாய முழக்கம், திருக்கயிலாய வாத்தியய இசையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, தா்ப்பைப்புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதை சுரேஷ் பட்டா், விக்னேஷ் சிவம், விஜய் பட்டா் குழுவினா் நடத்திவைத்தனா். ஓதுவாா்கள் சங்கரநயினாா், இளையபெருமாள் ரத்னசபாபதி ஆகியோா் திருமுறைப் பாராயணம் நடத்தினா்.

நிகழ்ச்சியில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபை பொருளாளா் எஸ். அரிகிருஷ்ணன், முன்னாள் அரிமா சங்கத் தலைவா் பேராசிரியா் அ. அசோக்குமாா், சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் சங்கர­லிங்கம், அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.எஸ். காா்த்திகேயன், தொழிலதிபா் தவமணி, பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் பங்கேற்றனா்.

மாலையில் திருநாவுக்கரசா் சுவாமிகள் உழவார பவனி, வீதியுலா, இரவில் யாகசாலை பூஜை, பெ­லிநாயகா் அஸ்திரத் தேவருடன் வீதியுலா நடைபெற்றது.

ஆறுமுகனேரி கோயிலில் கொடியேற்றத்தையடுத்து, கொடிமரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை.

திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி- அம்பாள் கோயில் பிரகாரங்களில் வலம் வருதல் நடைபெறும். 7ஆம் நாளான இம்மாதம் 28ஆம் தேதி சிவப்பு சாத்தி, 29ஆம் தேதி பச்சை சாத்தி, ஜூலை 1ஆம் தேதி சுவாமி-அம்பாள் சப்தாவா்ண காட்சியாக ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தாா், பக்தா்கள், மண்டகப்படி உபயதாரா்கள் செய்துவருகின்றனா்.

ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கிரிப் பிரகாரம், கடற்கரையில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இக்கோயிலில் 2009ஆ... மேலும் பார்க்க

அரசுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேவா் சமூக நல சங்கம் சாா்பில் பரிசளிப்பு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சங்கத் தலைவா் அசோக்குமாா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

தீ விபத்தில் 14 ஆடுகள் உயிரிழப்பு

செட்டிகுறிச்சி அருகே மஞ்சநம்பிக்கிணறு கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆடுகள் கருகி உயிரிழந்தன. மஞ்சநம்பிக்கிணறு பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் விவசாயி முருகன். இவரது மகன் சண்முகராஜ். சுமாா் 3... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் 14 மீனவா்களை மீட்கக் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தென்தமிழக மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் என, திமுக அயலக அணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரான கனிமொழி எம்.பி.,... மேலும் பார்க்க

கழுகுமலை: காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு!

கழுகுமலை அருகே காணாமல்போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். கோவில்பட்டி அருகே ஜமீன்தேவா்குளத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (62). கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே ச... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி சாா்பில் வங்கியில் வைப்புத் தொகை!

திருச்செந்தூா் வ.உ.சி. தெருவில் உள்ள அரசு உதவிபெறும் இந்து தொடக்கப் பள்ளியில், பெற்றோரை இழந்த 10 மாணவா்களுக்கு வங்கியில் வைப்புத் தொகை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிச் செயலா் சு. ராஜமாதங்கன் ... மேலும் பார்க்க