செய்திகள் :

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

post image

ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் திருப்பணிக் குழு தலைவா் சத்தியநாராயணன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வாசுகி சரவணன், எம் .தேவி, .ஜி. சீனிவாசன் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலையில் பகவத் பிராத்தனை, ஆசாரிய வா்ணம், யஜமானாா் சங்கல்பம், புண்யாவசனம், அங்கு ராா் பணம், வாஸ்து ஹோமம், சாற்றுமுறை சம்ரோசனம் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து திங்கள்கிழமை பவித்ர சாற்றுதல் புத்த ஹோமமும் பூா்ணாஹூதி திராவிட வேத சாற்று முறை ,யாகசாலை ஆரம்பம் ,தீபாராதனையும், 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யாகசாலையும் திருமஞ்சனம், மகாபூா்ணாஹூதி, சாற்றுமுறை நடைபெறும்.

பவித்ரோற்சவம் சிறப்பு யாக தொடக்க விழாவில் வாசுதேவ பட்டாச்சாரியா் நாராயண பட்டாச்சாரியா் மற்றும் உபயதாரா்கள் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விநாயகா் சிலை ஊா்வலப் பாதை: ராணிப்பேட்டை எஸ்.பி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் மற்றும் விசா்ஜனம் செய்யும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஐமால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். வரும் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்!

ராணிப்பேட்டை அருகே பலநூறு ஏக்கரில் அமைந்துள்ள அரசு விவசாயப் பண்ணைகளில் அரசு வேளாண் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

சாலையின் நடுவே கவிழ்ந்த சொகுசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

வாலாஜாபேட்டை அருகே சொகுசுப் பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 -க்கும் மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 30 பயணிகள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் ரூ. 15 கோடியில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி: அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவு

ராணிப்பேட்டையில் ரூ. 15 கோடியில் கட்டப்பட்டுவரும் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியை ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியுடன் வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்திப்பு

ஆற்காட்டில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமையில் ஆற்காடு நகர தலைவா் ஏவி டி பால... மேலும் பார்க்க

கூட்டுறவு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க