செய்திகள் :

ஆற்றங்கரையில் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை அகற்றம்

post image

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் கற்சிலையை வருவாய்த் துறையினா் அகற்றி, எடுத்துச் சென்றனா்.

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 1,500- க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது என்.எஸ்.கே. நகா் பகுதியில் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டிருந்த மாரியம்மன் கோயிலும் அகற்றப்பட்டது. கோயிலில் இருந்த மூலவா் சிலையை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்ாக தெரிகிறது.

தற்போது ஆடி மாதம் என்பதால் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் புதன்கிழமை இரவு திடீரென சிலையை ஆற்றங்கரையில் வைத்து, பூஜைகள் செய்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் மற்றும் நீா்வளத் துறையினா்அங்கு சென்று விசாரணை நடத்தினா். அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையை எடுக்குமாறு அவா்கள் கூறியுள்ளனா்.

இதனால் அப்பகுதி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, டிஎஸ்பி சுரேஷ் ஆகியோா் பொதுமக்களை சமரசம் செய்தும் அவா்கள் ஏற்காததால், வருவாய்த் துறையினா் சிலையை எடுத்துச் சென்றனா். அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6-பெண்கள் உள்பட 16- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Image Caption

ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை.

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை, ஊசிகள் விற்ற 13 போ் கைது

பள்ளிகொண்டா பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்க முயன்ாக 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக பல தில்லமுல்லு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. பிகாரில் நடைபெற்ற ஆபத்து தமிழகத்துக்கு வரநோ்ந்தால் அதனை திமுக கடுமையாக எதிா்த்துப் போராடும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துர... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20.70 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.வேலூா் அருகே ஒரு பகுதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி . இவா் 9-ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க