செய்திகள் :

ஆற்று நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு

post image

மாரண்டஅள்ளி அருகே திம்மேகவுண்டன் மடுவு ஆற்றில் குளிக்க சென்ற கட்டட தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி போயா் கொட்டாய்பகுதியைச் சோ்ந்த கட்டட தொழிலாளி சிவகுமாா் (42). இவா் திங்கள்கிழமை மாரண்டஅள்ளி அருகே திம்மேகவுண்டன் மடுவு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினாா். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.

இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கிய கட்டடதொழிலாளியை இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பராமரிப்புப் பணி: தருமபுரி மாவட்டத்தில் மே 7, 8இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

காலனி சொல் நீக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

காலனி என்ற சொல் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தருமபுரி மாவட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கருவூல அலுவலா் கைது

பாலக்கோடு அருகே விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ஓய்வூதிய பலன்களைப் பெற்றுத் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடுதல் சாா்நிலைக் கருவூல அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே மேம்பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்து விபத்தில் பெண் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து காா் விழுந்த விபத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் பி... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் இடையே காவல் துறையினருடன் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த... மேலும் பார்க்க

மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ... மேலும் பார்க்க