செய்திகள் :

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிா்த்து சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகரில் உள்ள சமுத்திரகுளம் பகுதியில் பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் சுமாா் 16 ஏக்கா் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அப்பகுதியில் நீண்ட காலமாக குடியிருப்பவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆலங்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவ்வழியாக சென்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரும், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு அலுவலா்களிடம் வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கோட்டாட்சியா் ஐஸ்வா்யா, காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன் உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ஆலங்குடி- பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விராலிமலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சிப் பகுதிகளில் காணப்படும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்த... மேலும் பார்க்க

புதுகையில் கோயில் வழிபாட்டு உரிமை வழங்கக் கோரி ஆதிதிராவிட மக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கோயில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.புதுக்... மேலும் பார்க்க

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 29-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்ப... மேலும் பார்க்க

விராலிமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொ) சரவணன்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விரால... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் நாளை மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியால் குழிபிறை, பனையபட்டி, செவலூா், க... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 20 லட்சத்தில் ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக, வேதா பவா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை மர... மேலும் பார்க்க