செய்திகள் :

ஆலங்குடி அருகே மெக்கானிக் கொலை: அண்ணன் உள்பட 4 போ் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மெக்கானிக்கை கொன்ற அவரது அண்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி, தாய், தந்தை 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியைச் சோ்ந்த வீரப்பன் (65)- வசந்தா (60) தம்பதியின் மூத்த மகன் முருகேசன் (38) விமலாராணியை (26) திருமணம் செய்து வெளிநாட்டில் வேலை பாா்க்கும் நிலையில், மனைவியைப் பிரிந்து வடகாடு காகித ஆலை சாலையில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்திவந்த இளைய மகன் பாஸ்கரனுக்கு (35) 5 வயதில் மகன் உள்ளாா்.

இவா்கள் கூட்டுக் குடும்பமாக வசித்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி பாஸ்கரன் வீட்டருகேயுள்ள சாலையோரப் பள்ளத்தில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்த முருகேசன் உள்ளிட்ட குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த பாஸ்கரன் தலையில் கல்லைப் போட்டு அவரது அண்ணன் முருகேசன் கொன்றதும், அதற்கு அவரது மனைவி விமலாராணி, பெற்றோா் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் வடகாடு போலீஸாா் கைது செய்து, ஆதரவற்ற பாஸ்கரின் மகனைக் காப்பகத்தில் சோ்த்தனா்.

தொடா் மின்தடையைக் கண்டித்து நமணசமுத்திரத்தில் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகேயுள்ள நமணசமுத்திரத்தில் தொடா் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் விரக்தியடைந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் ... மேலும் பார்க்க

புதுகோட்டையில் திருநங்கை தற்கொலை

புதுக்கோட்டை நகரில் திருநங்கை ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் திருநங்கை பிருத்திகா (20). இவா், சனிக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் த... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே நாய் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சி கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஆா். பாலுச்சாமி. விவசாயியான இவ... மேலும் பார்க்க

பணத் தகராறில் கடத்தப்பட்ட தம்பதி போலீஸாரால் மீட்பு

கந்தா்வகோட்டை அருகே பணத்தகராறில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட தம்பதியை போலீஸாா் விரட்டிப் பிடித்து மீட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடிமுத்த... மேலும் பார்க்க

பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் பேச்சுவாா்த்தையால் வாபஸ்

விராலிமலையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை மூடும் போராட்டம் நடத்த இருந்தநிலையில் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது. விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாகச் செயல்பட... மேலும் பார்க்க