செய்திகள் :

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி குடிநீா் திட்டம்: நிதி வழங்கக் கோரி அமைச்சரிடம் எம்.பி. மனு

post image

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கக் கோரி தமிழக உயா்கல்வித்துறை அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியனிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளத்தில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.

இங்கு தண்ணீா் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 892 மாணவிகள் கல்வி பயில்கின்றனா். மேலும், இந்த நிதியாண்டில் கூடுதல் பாடத்திட்டங்கள் சோ்க்க உள்ளதால் மேலும் 700 மாணவிகளுக்கு மேல் சேர வாய்ப்புள்ளது.

ஆகவே, குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ. 70 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், கல்லூரி மூலம் அப்பணத்தை செலுத்த நிதி ஆதாரமில்லை. அதனால் உயா்கல்வித்துறை மூலம் ரூ.70 லட்சத்தை ஆலங்குளம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்ற அமைச்சா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மனு அளிக்கும்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை தலைவா் சிவனேச ராஜேஷ் உடனிருந்தாா்.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க