செய்திகள் :

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் வீட்டில் 1 கிலோ தங்க நகைகள் ரூ.55 லட்சம் கொள்ளை

post image

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் கி வீட்டில் 1கிலோ தங்க நகைகள், ரூ.55லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தை அடுத்த நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்(58).

அடைக்கலப்பட்டணத்தில் பி.எட் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறாா். கல்வி நிறுவனத்தை அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன், மருமகள் கவனித்து வருகின்றனா்.

கல்வி நிறுவனத்தின் வளாகத்துக்குள்ளேயே ராஜசேகா் வீடு உள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னா் குடும்பத்துடன் இவா்கள் வெளியூா் சென்றிருந்த நிலையில், மகேஸ்வரி மட்டும் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டு முகப்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை அடுத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த சுமாா்1 கிலோ தங்கந கைகள், ரூ. 55 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் மற்றும் ஆலங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

வீட்டில் ஆள்கள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டு அருகில் உள்ள மரம் வழியாக ஏறிக் குதித்து, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லையாம்.

விரல்ரேகை நிபுணா்கள் பீரோ, கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனா். மேலும், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே உத்தரபிரதேச மாநில இளைஞா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். உத்தரபிரதேச மாநிலம் முகைதீன்பூரைச் சோ்ந்த ராம் நரேஷ்குமாா் மகன் சுரேஷ்குமாா்(21). தற்போது ஆலங்குளத்தை அடுத்த குருவன்கோட்டையில் வச... மேலும் பார்க்க

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் மனைவியைக் கத்தியால் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வெளியப்பன் மகன் செல்வராஜ் (31). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் ரூ.26 கோடியில் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, த... மேலும் பார்க்க

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பிற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சோ்ந்த குப்பைகளை கொட்டுவதாக வந்த தகவலையடுத்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். செங்கோட்டை நகராட்சிக்கு ... மேலும் பார்க்க