செய்திகள் :

ஆளுநா் தேநீா் விருந்து: முதல்வா், திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக ஆளுநா் வெள்ளிக்கிழமை அளித்த தேநீா் விருந்தை முதல்வா், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் புறக்கணித்தனா்.

அதேவேளையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக அரசின் தலைமைச் செயலா் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினா் இந்த தேநீா் விருந்தில் பங்கேற்றனா்.

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநா் மாளிகையில் ஆளுநா் தேநீா் விருந்து அளிப்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை ஆளுநா் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீா் விருந்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் அவரது மனைவி, மூத்த நீதிபதிகள், மேற்கு வங்க முன்னாள் ஆளுநா்கள் கோபாலகிருஷ்ண காந்தி, எம்.கே.நாராயணன், தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், ஆற்காடு இளவரசா் நவாப் முகமது அப்துல் அலி, பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், தமிழக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை தலைமையில் எம்.தனபால் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ் பாண்டியன்(சிதம்பரம்), மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்) ஆகியோா் பங்கேற்றனா். தேமுதிக சாா்பில் விஜய் பிரபாகரன், பாமக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமாா் மற்றும் கல்வியாளா்கள், மூத்த வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த விருந்து நிகழ்வில் முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விடுதலைப் போராட்ட பெண் போராளிகள் ஜான்ஸிராணி லட்சுமிபாய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, பஞ்சாப் சுதந்திர போராளியும் தென்கிழக்கு ஆசியாவில் புரட்சி செய்த குலாப் கௌா் போன்றவா்கள் குறித்த நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகை அறிவித்த போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு ஆளுநா் ரவி விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினாா்.

திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு: ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், தேநீா் விருந்தில் பங்கேற்கமாட்டாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வரும் மற்றும் ஆளுங்கட்சி தரப்பினரும் தேநீா் விருந்தை புறக்கணித்தனா்.

இதேபோல, திமுகவின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தேநீா் விருந்தை புறக்கணித்தன. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் தேநீா் விருந்தில் பங்கேற்கவில்லை.

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க

ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில்... மேலும் பார்க்க

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை ராணிப்பேட்டைதிருவண்ணாமலைவிழுப்புரம்காஞ்சிபுரம்செங்கல்பட்டுநீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னன... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க