செய்திகள் :

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

post image

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் என தலா 10 ஆசிரியா் பணியிடங்கள் வீதம் 200 ஆசிரியா் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடலூா் (பண்ருட்டி), கள்ளக்குறிச்சி (ரிஷிவந்தியம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்கல்பட்டு (பேரனூா் கிராமம்), திண்டுக்கல் (வளவிசெட்டிபட்டி), திருச்சி (கள்ளக்காம்பட்டி), திருப்பத்தூா் (திம்மாம்பேட்டை), மதுரை (செட்டிகுளம்), சென்னை (மாத்தூா்-மாதவரம்), விழுப்புரம் (கஞ்சனூா்), திருச்சி (கலைஞா் கருணாநிதி நகா்), விழுப்புரம் (மேல்கரணை), ராமநாதபுரம் (வாலிநோக்கம்-கடலாடி வட்டம்), திருப்பூா் (முதலிபாளையம்), கிருஷ்ணகிரி (பாத்தகோட்டா-சூளகிரி வட்டம்), சேலம் (லக்கம்பட்டி ஊராட்சி, நீதிபுரம்), திருவண்ணாமலை (வேளானந்தல்), நாகப்பட்டினம் (கணபதிபுரம்), ராமநாதபுரம் (புதுமடம்), கன்னியாகுமரி (வாரியூா்) ஆகிய 20 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளிகள் தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ளாா். துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பனை செயல்படுத்தும் வகையில் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

சநாதனம் என்பது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது; பிரிவினையை ஏற்படுத்துவது இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா். சென்னைஅடையாறு ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சந்த் விஸ்வ மெளலி ஸ்ரீ தியானேஸ்வா் மகாராஜின் 750... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் சனி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை முறையாக செலுத்த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலமாக ஒரு மாதத்தில் 30 லட்சம் கோரிக்கை மனுக்கள் குவிந்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டம் தொடங்கப்பட்டு 30 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், அதற்காகப் பயன்படுத்திய அகராதி குறித்து அறிக்கை தாக்க... மேலும் பார்க்க