செய்திகள் :

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் ஆய்வு

post image

திருவாரூரில் நடைபெற்று வரும் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், செவ்வாய்க்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2012-ஆம் ஆண்டிலிருந்து ஆழித்தேரோட்டத்துக்கும், தேரோட்டத்துக்கு வருகை தரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கவும், தோ்க் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்கும் ஆதீனம் அருளாட்சிக்குள்பட்ட அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளையிலிருந்து நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, வேளாக்குறிச்சி ஆதீனம் சாா்பில் ஆழித்தேரோட்ட விழாவுக்கென நிகழாண்டில் ரூ. 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவாரூா் கீழவீதி தேரடியில் நடைபெற்று வரும் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை, வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் கவியரசு உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க