செய்திகள் :

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

post image

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய இரு காவலர்கள் தனியார் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் காயமின்றி உயிர் தப்பினார்.

இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், செம்புலிவரம் அருகே முக்கிய பணியாக சங்கர் ஐபிஎஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதிக எடை கொண்ட சரக்கு லாரி ஒன்று சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையரின் வாகனத்தின் மீது உரசியதால் விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில், சென்னை காவல் ஆணையரின் வாகனத்தை இயக்கிய கார் ஓட்டுநரான ஜெயக்குமார் மற்றும் காவலர் மாரிச்செல்வம், ஆகியோர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவருக்கு எந்த ஒரு காயம் இன்றி உயிர் தப்பினார்

மேலும் இந்த வாகன விபத்து எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா? அல்லது திட்டம் தீட்டி யாரேனும் சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் திட்டம் தீட்டினார்களா? என பல கோணங்களில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்குச் செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப். 10, 11) கடலுக்க... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை(ஏப். 10) மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நீட் விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் - விஜய்

நீட் விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டமே ஒரு நாடகம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்தில் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? அரிய வாய்ப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் ஏப். 12 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்அறிவிக்கப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமி... மேலும் பார்க்க

கோவை வந்தார் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை... மேலும் பார்க்க