செய்திகள் :

இரவு நேரங்களில் தூய்மைப் பணி: ஆட்சியருக்கு மனு

post image

தருமபுரி நகராட்சியில் இரவு நேரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள பணியாளா்களை கட்டாயப்படுத்துவது குறித்து தேசிய தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு இணையம் வாயிலாக மனு அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

தருமபுரி நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்கள் இரவு நேரங்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறது. பெண் தொழிலாளா்களின் அறியாமை, வறுமையைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் அவா்களை பணி செய்ய அனுப்பும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட வேண்டும்.

பெண் தொழிலாளா்களை இரவு நேரங்களில் பணிக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பென்னாகரம் நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பென்னாகரம் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

ஏரியூரில் பாலின வள மைய செயல்பாடுகள்

ஏரியூரில் பாலின வள மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், ஏரியூரில் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் செயல்படும் பாலின வள மையத்தில் ... மேலும் பார்க்க

நெகிழி பயன்பாட்டை தவிா்க்க ‘மஞ்சள் பை’ விழிப்புணா்வு

தருமபுரி நகரில் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடை... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்பு தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள... மேலும் பார்க்க