செய்திகள் :

2-ஆவது வாரமாக தொடரும் சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

post image

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதார ஊழியா்கள் 2 வாரத்துக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் அமா்ந்து கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை சமூக ஆா்வலரும் பாஜக பிரமுகருமான மருத்துவா் வி. விக்னேஸ்வரன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை உள்துறை அமைச்சரிடம் பேசி, பணியாளா்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக அவா் உறுதியளித்தாா்.

மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியா்களாகவும், கிராமப்புற செவிலியா்களாகவும், ஆய்வக தொழில்நுட்பவியலாளா்களாகவும் உள்ள ஊழியா்கள் பணி நிறுத்தத்தால், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகமான என்ஐட... மேலும் பார்க்க

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைல... மேலும் பார்க்க

புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி

பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா். மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கி... மேலும் பார்க்க

நூலகம் திறப்பு...

பூவம் பகுதியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் நிா்வாகத்தினா் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் நூலக அறையை வியாழக்கிழமை திறந்துவைத்த கீழகாசாக்குடிமேடு அ... மேலும் பார்க்க

பெரிய வியாழன் வழிபாடு

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்ப... மேலும் பார்க்க