செய்திகள் :

ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

ஆவடி ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் திடீரென மூடப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆவடியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.செல்வம் தாக்கல் செய்த மனுவில், எனது மாணவப் பருவம் முதல் ஆவடி ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகிறேன். எனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கான மாதாந்திர அட்டையும் வாங்கியுள்ளேன்.

இந்த வாகன நிறுத்தம் அமைந்துள்ள இடம் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்குச் சொந்தமானது. இந்த வாகன நிறுத்தத்தை சுமாா் 40 ஆண்டுகளாக போலீஸாா் நிா்வகித்து வருகின்றனா். இந்நிலையில், முன்னறிவிப்பு எதுவுமின்றி, ஆட்சியா் உத்தரவுப்படி, கடந்த 19-ஆம் தேதி ஆவடி வட்டாட்சியா் வாகன நிறுத்தத்தை மூடிவிட்டாா். இதனால், இந்த வாகன நிறுத்தத்தைப் பயன்படுத்திய 2,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த வாகன நிறுத்தத்தை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான ஜெ.பிரதீப், ஆவடி பகுதி மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால், வாகன நிறுத்தத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதேபோல், கண்ணூர் - பெங்களூரு, பெங்களூரு - கண்ணூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்ப... மேலும் பார்க்க

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்... மேலும் பார்க்க

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க