செய்திகள் :

ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து

post image

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிா்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து டேங்கா் லாரியில் பால் கொண்டுவரப்பட்டது. அப்போது, டேங்கா் லாரியில் இருந்த பாலை திருடிவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீா் கலந்திருப்பதை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா் கண்டுபிடித்தனா். இதையடுத்து லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இந்தச் சம்பவத்தில் டேங்கா் லாரி உரிமையாளா்களுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டேங்கா் லாரி உரிமையாளரும், அதிமுக நிா்வாகியுமான வைத்தியநாதன் உள்பட 28 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளா்களான வைத்தியநாதன், பூதப்பாண்டி மற்றும் ரேவதி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், இந்த விவகாரம் குறித்து ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். அதில், பால் திருடப்படவும் இல்லை அதில் கலப்படமும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை போலீஸாரும் ஏற்றுக்கொண்டுள்ளனா். எனவே மனுதாரா்கள் மீதான விசாரணையை நிலுவையில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி, மனுதாரா்கள் உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க