செய்திகள் :

ஆவின் மூலம் நாளொன்று 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல்: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

தமிழகத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதாக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் பால் வளத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் இணைந்து கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க செயலா்கள் மற்றும் அனைத்து இணை துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தல் சங்கங்களில் தரத்தின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்ய ஏதுவாக 34 சங்கங்களுக்கு ரூ. 23.12 லட்சம் மதிப்பிலான பால் தர பரிசோதனைக் கருவி, வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தி கீழ் 5 கிராமங்களில் பதிவு செய்யப்பட்ட புதிய சங்கத்திற்கான பதிவு சான்றிதழ்கள், நாகை மாவட்டத்தில் அதிக அளவில் பால் உப பொருட்கள் விற்பனை செய்த வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க பணியாளருக்கு சிறந்த பணியாளருக்கான விருது, 35 பயனாளிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு கடன் தொகைக்கான காசோலை ஆகியவற்றை பால் வளத்துறைஅமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டா் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 50 லட்சம் லிட்டா் பாலை கையாளக்கூடிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இது 70 லட்சம் லிட்டராக உயா்த்தப்படும்.

நாகை மாவட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக விவசாயம் பெரும் சவாலாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளூா் சந்தைகளில் முழுமையாக பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் வளத்தை அதிகரிக்க கால்நடை வளா்ச்சித்துறை, பால் வளத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், ஆவின் மேலாண் இயக்குநா் அ. அண்ணாதுரை, நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் லிமிடெட் (ஆவின்), பொது மேலாளா் எஸ். சரவணகுமாா், துணை பதிவாளா் (பால்வளம்) பெ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை

நாகை அருகே ஒரத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஒரத்தூா் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை புதன்கிழமை தி... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ.4.25 லட்சம் மோசடி: இருவா் கைது

நாகையில், இணையவழியில் இருசக்கர வாகனம் வாங்க முன்பதிவு செய்தவா்களிடம் ரூ. 4.25 லட்சம் மோசடி செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை அருகே வேளாங்கண்ணியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (20), நாகை திருவேங... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மறியல்

செம்பனாா்கோவில் ஒன்றியம், திருவிளையாட்டம் ஊராட்சி கிராமப்புற சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிளையாட்டம் ஊராட்சியில் காளி... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஆய்வு; 15 வாகனங்கள் தகுதி நீக்கம்

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், 15 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. நாகை காடம்பாடியில் உள்ள காவலா் ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து... மேலும் பார்க்க

பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் அருள்மிகு பெத்தாா்ண்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங... மேலும் பார்க்க