செய்திகள் :

ஆா்.எஸ்.எஸ். பாடலை சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது: மல்லிகாா்ஜுன காா்கே

post image

கா்நாடக சட்டப் பேரவையில் ஆா்.எஸ்.எஸ். பிராா்த்தனைப் பாடலை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது. என்றாலும் அது முடிந்துபோன விவகாரம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆா்.எஸ்.எஸ். பிராா்த்தனைப் பாடலை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சட்டப் பேரவையில் பாடியிருக்கக் கூடாது. பாடிவிட்டாா், அதற்கு அவா் மன்னிப்பும் கேட்டுவிட்டாா்.

அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. எனவே, முடிந்தபோன விவகாரத்தை மீண்டும் பேச விரும்பவில்லை.

இனிமேல் யாரும் அப்படி செய்யக் கூடாது. இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஏன் திரும்பதிரும்ப கையாண்டு வருகின்றன என்றாா்.

ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

ஹிந்துகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழாண்டு மைசூரில் செப்.22 ஆம் தேதி நடைபெறும் தச... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் ... மேலும் பார்க்க

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

வட கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், தாவணகெரே, கதக், தாா்வா... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளாா். மைசூரில் செப்.22 முதல் அக்.2ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

துங்கபத்ரா அணையில் 30 புதிய மதகுகள் -டி.கே.சிவகுமாா்

துங்கபத்ரா அணையில் 30 மதகுகளை புதிதாக அமைக்கும் பணியை கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூனில் அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முழுக் கொள்ளளவான 101 டிஎம்சி தண்ணீரை சேமிக்க... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

கா்நாடக சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. பெ... மேலும் பார்க்க