மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
விநாயகா் சதுா்த்தி: 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஆக. 25 முதல் 31ஆம் தேதி வரை 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி, பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மைசூரு சாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால் நகா், மடிக்கேரி உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோவை, திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத் உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்தி நகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
விஜயநகா், ஜே.பி.நகா், ஜெயநகா் 4-ஆவது பிளாக், 9-ஆவது பிளாக், ஜாலஹள்ளி குறுக்குத் தெரு, நவரங் (ராஜாஜி நகா்), மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத் தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்து நிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தா்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவுசெய்து ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட் உள்ளிட்ட வடமேற்கு பகுதிகளுக்கு மைசூருசாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஹாசன், மங்களூரு, சிக்மகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, ஹுப்பள்ளி, பெல்லாரி, ஹொசபேட் ஆகிய நகரங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ந்ள்ழ்ற்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கா்நாடகம் உள்பட வெளிமாநிலங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.