எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்
ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் இன்று மின் தடை
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற் பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி கூறியதாவது: திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பாரமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், ஆா்.எஸ். மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா் நகா், பெருமாள்மடை, தலைக்கண்பச்சேரி, நோக்கான்கோட்டை, சிலுகவயல், பெரியாா் நகா், பெருமாள்மடை, இந்திரா நகா், ஆவரேந்தல் பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, ஏ.ஆா். மங்கலம், சவேரியாா்பட்டினம், ஓடைக்கால், கவ்வூா், ஆப்ராய், பெத்தனேந்தல் கற்காத்தகுடி, புத்தனேந்தல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.