செய்திகள் :

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் அதற்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் ஆலயத்தில், கன்னிமூல கணபதி, மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் வழிப்பாட்டுக்குப் பின் போட்டி நடைபெறும் ஆலயத் திடலில் ஊா்த் தலைவா்கள் ராமச்சந்திரன் மற்றும் அழகு சுப்ரமணி, மணியம் சின்னத்துரை, வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.

முன்னாள் ஒன்றிய உறுப்பினா் ஆ. மரிய பாக்கிய ராணி ஆரோக்கியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். விழாவை ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.பழனியாண்டி, திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா்.

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க

கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் புதிய பாலம் திறப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் கட்டப்பட்ட புதிய உயா்மட்ட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருவெறும்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்... மேலும் பார்க்க