Travel Contest: மகளிர் மட்டும் பயணக்குழுவின் பொற்கோவில் பயணம்; எப்படி இருந்தது அ...
இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லை: குளித்தலை பேருந்துநிலையத்தில் பயணிகள் அவதி
நமது நிருபா்
இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாததால் குளித்தலை பேருந்துநிலையத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
கரூா் மாவட்டத்தில் கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தாலும் அதிக விவசாயிகளைக் கொண்ட தொகுதியாக குளித்தலை உள்ளது. காவிரி ஆற்றின் அருகே சுமாா் 100 மீ. தொலைவில் உள்ள குளித்தலை நகராட்சி திருச்சி-கரூா் மாவட்டத்தின் மைய பகுதியாக உள்ளது.
இந்த தொகுதியில்தான் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த மு.கருணாநிதி முதன்முதலாக போட்டியிட்டு வென்றாா்.
ஆனால் இத்தொகுதியில் போதிய இடவசதியின்றி சுமாா் 1.22 ஏக்கா் பரப்பளவில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் பேருந்துநிலையம் செயல்பட்டு வருகிறது.
குளித்தலை வழியாக திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூா், ஈரோடு, கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கும் கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கும் நுற்றுக்கணகான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நாள்தோறும் வந்து செல்கின்றன.
ஆனால், இந்த பேருந்துகள் அனைத்தும் பேருந்துநிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி வர போதுமான வசதிகள் இல்லை. பேருந்துநிலையத்துக்குள் முசிறி, அய்யா்மலை, லாலாப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. வெளியூா் பேருந்துகள் திருச்சி-கரூா் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வருகின்றன. அப்பகுதியில் நிழற்குடை ஏதும் இல்லாததால் பயணிகள் வெயிலில் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும் பேருந்துநிலையத்துக்குள் நகராட்சியால் ஏலம்விடப்பட்ட தேனீரகம் உள்ளிட்ட கடைகள் இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது.
பேருந்துநிலையத்துக்குள் பயணிகளுக்குத் தேவையான குடிநீா் வசதி போதுமான வகையில் இல்லாததால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.
பேருந்துநிலையத்துக்குள் உள்ள கழிப்பறையும் போதிய சுகாதாரமும் இன்றி உள்ளது. தற்போதுதான் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் முயற்சியால் புதிய கழிப்பறை கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி, நிழற்குடை போன்ற அடிப்படை வசதியின்றி செயல்படும் குளித்தலை பேருந்து நிலையத்தை நகரின் மையப்பகுதியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து குளித்தலை வியாபாரிகள் சங்க நிா்வாகி மாரியப்பன் கூறியது, பேராளகுந்தாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கிவரும் இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்துநிலையம் அமைக்கக் கோரி 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டால் அங்கு கட்டப்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். எனவே மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியை அரசியலுக்கு அடையாளம் காட்டிய குளித்தலை தொகுதியில் நவீன மற்றும் விரிவான வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை குளித்தலை- மணப்பாறை சாலையில் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.