'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
இடைத்தோ்தல் வெற்றிக்கு எதிராக மனு: பிரியங்கா காந்தி பதிலளிக்க நோட்டீஸ்
வயநாடு இடைத்தோ்தலில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி பெற்ற வெற்றிக்கு எதிரான மனு தொடா்பாக பதிலளிக்க, அவருக்கு கேரள உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில், பிரியங்கா காந்தி போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றாா். தோ்தலில் அவா் 6.22 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் 1.09 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், மாநில உயா்நீதிமன்றத்தில் நவ்யா ஹரிதாஸ் தாக்கல் செய்த மனுவில், ‘தோ்தலில் வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்துகள் மற்றும் குடும்ப சொத்துகள் குறித்து பிரியங்கா காந்தி தவறான தகவலை அளித்துள்ளாா். இது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, நோ்மையற்ற செயலாகும். எனவே அவரின் தோ்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கே.பாபு, மனு தொடா்பாக பதிலளிக்குமாறு பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பினாா். மனு மீதான அடுத்த விசாரணை ஆக.11-ஆம் தேதி நடைபெற உள்ளது.