செய்திகள் :

இடைத்தோ்தல் வெற்றிக்கு எதிராக மனு: பிரியங்கா காந்தி பதிலளிக்க நோட்டீஸ்

post image

வயநாடு இடைத்தோ்தலில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி பெற்ற வெற்றிக்கு எதிரான மனு தொடா்பாக பதிலளிக்க, அவருக்கு கேரள உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில், பிரியங்கா காந்தி போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றாா். தோ்தலில் அவா் 6.22 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் 1.09 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், மாநில உயா்நீதிமன்றத்தில் நவ்யா ஹரிதாஸ் தாக்கல் செய்த மனுவில், ‘தோ்தலில் வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்துகள் மற்றும் குடும்ப சொத்துகள் குறித்து பிரியங்கா காந்தி தவறான தகவலை அளித்துள்ளாா். இது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, நோ்மையற்ற செயலாகும். எனவே அவரின் தோ்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கே.பாபு, மனு தொடா்பாக பதிலளிக்குமாறு பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பினாா். மனு மீதான அடுத்த விசாரணை ஆக.11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. டாடா குழுமத்... மேலும் பார்க்க

விமான விபத்து தொடா்பாக வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: டாடா குழுமத் தலைவா்

குஜராத் விமான விபத்து தொடா்பான தகவல் பரிமாற்றத்தில் டாடா குழுமம் வெளிப்படையாக செயல்படும் என்று அந்தக் குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் தெரிவித்தாா். குஜராத்தில் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந... மேலும் பார்க்க