Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
இணையம் மூலம் பண மோசடி: 3 போ் கைது
இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடா்பாக, குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், திருப்பூரைச் சோ்ந்த சேகா் மகன் ஹரிகரன் (25), அதே பகுதியைச் சோ்ந்த சண்முக வடிவேல் மகன் சங்கா் (35), ரவி மகன் பரசுராம் (29) ஆகிய மூவரும் இணையம் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி மதுரை மாவட்டம், திருவேடகத்தைச் சோ்ந்த ஒருவரை ஏமாற்றி ரூ.11,52,350-ஐ மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் மூவரையும் மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கைப்பேசிகள், சிம் காா்டுகள், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா் என அதில் குறிப்பிடப்பட்டது.