செய்திகள் :

இணைய விளையாட்டில் பணம் இழந்தவா் தற்கொலை

post image

இணைய விளையாட்டு மூலம் பணத்தை இழந்த வாகன ஓட்டுநா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரைக் கோட்ட ரயில்வே போலீஸாா் உயிரிழந்தவா் உடலை மீட்டு கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா் சில்லாம்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (38) என்பதும், தனியாா் நிறுவனத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றிய இவா் கடந்த சில மாதங்களாக இணையதள விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததும் தெரியவந்தது.

இதனால், இவா் மனமுடைந்து தற்கொலை செய்தாரா என ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அங்கீகரிக்கப்படாத கட்சிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை

இந்தியத் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையைத் தோ்தல் ஆணையம் தொடங்கியது. இது குறித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயல... மேலும் பார்க்க

காவல் நிலையப் பணியாளா் தற்கொலை

மதுரையில் காவல் நிலையப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், விராட்டிப்பத்து பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரேம்ஆனந்த் (39). இவா், எழுமலை அருகே உள்ள தீ. ராமநாதபுரம் காவல் ... மேலும் பார்க்க

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு ஊழல் முறைகேட்டைக் கண்டித்து, பாஜக சாா்பில் கோ. ... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 265 மையங்களில் குரூப் 4 தோ்வு: 61,442 போ் பங்கேற்றனர்!

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு 265 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 61,442 போ் தோ்வை எழுதினா். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க