செய்திகள் :

``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!

post image

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு நடத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.

இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'ஆபரேஷன் சிந்தூருக்கு முன், அதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார் மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

பிரதமர் நரேந்திர மோடி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்,

"* கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் மோடி 72 நாடுகளுக்கு 151 முறை வெளிநாட்டுப் பயணம் செய்திருக்கிறார். இதில், அமெரிக்காவிற்கு மட்டும் 10 முறை சென்றுள்ளார். இருந்தும், மோடி அரசின் வெளியுறவுத் துறை கொள்கையின் கீழ், நமது இந்தியா தனியாகவே நிற்கிறது. ஆக, வெளிநாடுகளுக்கு செல்வதும், அங்கே போட்டோகளுக்கு போஸ் கொடுப்பது மட்டுமே பிரதமரின் வேலையா?

*சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால், யாரும் இந்தியாவின் கூற்றுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே, ஏன்?

இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்

* இந்த மாதிரியான சூழல்களில் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிக்க இந்தியாவிற்கு சர்வதேச நாடுகளின் உதவி தேவைப்பட்டது. ஆனால், எந்த நாடும் நமது உதவிக்கு வரவில்லையே ஏன்?

* அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது குறித்து மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்காமல் இன்னமும் மோடி ஜி உண்மைகளை மறைந்துகொண்டிருக்கிறார்" என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல... மேலும் பார்க்க

பாபநாசம், கல்லிடைகுறிச்சி; தாமிரபரணியில் டன் கணக்கில் கழிவுகளை அள்ளி தூய்மை செய்த தன்னார்வலர்கள்!

பாபநாசம்பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என்தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச்சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் கா... மேலும் பார்க்க

Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?

''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதி... மேலும் பார்க்க