செய்திகள் :

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தலைமைத் தளபதி மனித குலத்தின் எதிரி: பலூச் தலைவர்!

post image

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததற்கு, அமெரிக்க பலூச் காங்கிரஸ் தலைவர் தாரா சந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீர் 2 மாதங்களில் 2-வது முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, சிந்து நதி நீரை இந்தியா முடக்குவதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்றும், இந்தியா கட்டும் எத்தகைய அணையாக இருந்தாலும் அதை தகர்ப்போம் என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு, பல்வேறு முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பலூசிஸ்தான் மாகாண அரசின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்க பலூச் காங்கிரஸின் தலைவருமான தாரா சந்து, அசீம் முனீர் பாகிஸ்தானின் போலியான தளபதி எனக் குறிப்பிட்டு காட்டமாகத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“அமெரிக்காவில் இருந்து இந்தியாவை தனது அணு ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய பாகிஸ்தானின் போலியான ஃபீள்ட் மார்ஷல், ஜெனரல் அசீம் முனீர், வெட்கப்பட வேண்டும். அவர் மனித குலத்தின் முதல் எதிரி, இஸ்லாமின் பெயரால் மதத் தீவிரவாத்தின் பைத்தியகாரத்தனத்தால் இவ்வாறு செய்கிறார். இந்தியாவுடன் சேர்த்து முழு உலகையுமே அவர் அழிக்கத் திட்டமிட்டுகிறார்” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உலகத் தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானிடம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற் வேண்டுமெனவும், அந்நாட்டின் மீது பொருளாதாரம், அரசியல் உள்பட சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்துடன், பாகிஸ்தானின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானை தனி நாடாக உருவாக்க வேண்டுமெனக் கோரி பலூச் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரித்து ஆதரவுத் தெரிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

American Baloch Congress President Tara Sandhu has condemned Pakistan Army Chief General Asim Munir's nuclear threat to India.

அமெரிக்காவில் சீக்கிய முதியவா் மீது இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவா் ஹா்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிரபல ஹிந்து கோயில் மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இண்டியானா மாகாணத்தின் கிரீன்வுட் நகரில் சுவாமி நாராயண... மேலும் பார்க்க

இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடக்கம்

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு பதவில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முத... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு: அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் செயல்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தலிபான், ஐஎஸ்எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான்-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுளும் ஒப்புக் கொண்டுள்ளன. ப... மேலும் பார்க்க