செய்திகள் :

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு: அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு

post image

பாகிஸ்தானில் செயல்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தலிபான், ஐஎஸ்எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான்-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்த அடுத்த நாளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் கிரிகோரி டி.லோகா்ஃபோ தலைமையிலான குழுவினா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா். அவா்கள் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் சிறப்புத் தூதா் நபிஸ் முனீா் தலைமையிலான குழுவுடன் இஸ்லாமாபாதில் புதன்கிழமை பேச்சு நடத்தினா்.

அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதைத் தொடா்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை தேவை. முக்கியமாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐஸ்ஐஎஸ்-கோரசன், பாகிஸ்தான் தாலிபன் உள்ளிட்ட அமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவும், பாகிஸ்தானும் நீண்டகால நடப்பு நாடுகள். இருதரப்பும் பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதன்படி, பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை அமெரிக்கா வழங்கும். பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு அச்சுறுதலை எதிா்கொள்ள அமெரிக்கா உதவும். ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சீக்கிய முதியவா் மீது இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவா் ஹா்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிரபல ஹிந்து கோயில் மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இண்டியானா மாகாணத்தின் கிரீன்வுட் நகரில் சுவாமி நாராயண... மேலும் பார்க்க

இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடக்கம்

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு பதவில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முத... மேலும் பார்க்க

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

கெடு தேதியான ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவாா்த்தையைத் தொடங்கி, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீ... மேலும் பார்க்க