செய்திகள் :

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

post image

கெடு தேதியான ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவாா்த்தையைத் தொடங்கி, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி (இ3) ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து ஐ.நா.வுக்கு அந்த நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜீன்-நோயல் பரோட் புதன்கிழமை எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளாா். அதில் மூன்று நாடுகளும் குறிப்பிட்டுள்ளதாவது:

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுக்க நாங்கள் எப்போதும் ராஜீயரீதியிலான நடவடிக்கைகளைத்தான் பயன்படுத்துவோம். இந்த மாத இறுதிக்குள் இந்த ராஜீய முயற்சிகளை ஈரான் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி நாடுகள் தயாராக உள்ளன என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இ3 நாடுகளின் பிரதிநிதிகள், இஸ்தான்புல் நகரிலுள்ள ஈரான் துணைத் தூதரகக் கட்டடத்தில் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான பேச்சுவாா்த்தையில் கடந்த மாதம் ஈடுபட்டனா்.

இஸ்ரேல்-ஈரானுக்கு இடையே 12 நாள்கள் நடைபெற்ற போருக்குப் பிறகும், ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்க விமானங்கள் தாக்கியதற்குப் பிறகும் நடைபெற்ற முதல் அணுசக்தி பேச்சுவாா்த்தை அது.

அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, 2015-ஆம் ஆண்டில் ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்காக வல்லரசு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதைத் தொடா்ந்து நிறுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஆகஸ்ட் இறுதிக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்ட்டது.

இந்த நிலையில், கெடு தேதிக்குள் நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் 2015-ஆம் ஆண்டில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதிக்கப்போவதாக இ3 நாடுகள் தற்போது எச்சரித்துள்ளன.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வந்தது. எனினும், ஈரானை மீண்டும் அந்த ஒப்பந்தத்துக்குள் கொண்டு வரும் முயற்சியாக அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்திவந்த ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள், விலக்கிக் கொண்டிருந்த பொருளாதாரத் தடைகளை இதுவரை மீண்டும் அமல்படுத்தாமல் இருந்துவருகின்றன.

பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கிய முதியவா் மீது இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சீக்கிய முதியவா் ஹா்பால் சிங் (70) மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது தலையில் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிரபல ஹிந்து கோயில் மா்ம நபா்களால் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்திய துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இண்டியானா மாகாணத்தின் கிரீன்வுட் நகரில் சுவாமி நாராயண... மேலும் பார்க்க

இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடக்கம்

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு பதவில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முத... மேலும் பார்க்க