செய்திகள் :

இந்தியா, கனடா உறவில் விரிசல்; சரிசெய்யும் முயற்சியில் கனடா? - அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வதென்ன?

post image

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023-ம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அப்போது முதல் இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்தது. அது நாளுக்குநாள் அதிகரித்தது. இதற்கிடையில், பொருளாதாரம், நிர்வாகம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்குப் பிறகு கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். தொடர்ந்து, இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்தை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.

Anita Anand
அனிதா ஆனந்த் (Anita Anand)

கனடாவின் முதல் இந்து வெளியுறவுத்துறை அமைச்சர் என்றப் பெருமையுடன் இந்தியா - கனடாவின் உறவில் உள்ள விரிசலை சரிசெய்ய முயன்றுவருகிறார் அனிதா ஆனந்த்.

அதன் அடிப்படையில், நேற்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், கனட வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தும் தொலைபேசியின் மூலம் பேசிக்கொண்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் எக்ஸ் பக்கத்தில், ``கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உடனான தொலைபேசி உரையாடலைப் பாராட்டுகிறேன். இந்தியா-கனடா உறவுகளின் வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். அவரது பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க