செய்திகள் :

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

post image

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

கடந்த ஏப். 23ல் ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது.

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை இந்திய ராணுவமும் வடக்கு காஷ்மீரில் உள்ள உரி முதல் ஜம்முவில் உள்ள பூஞ்ச், ரஜோரி வரை பாகிஸ்தான் ராணுவமும் கடுமையான தாக்குதல் நடத்தியது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று(மே 23) இரவு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்திய எல்லை பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி ஒருவர், இந்திய எல்லைக்குள் நுழைய வேலியைத் தாண்டி வந்தார். அவரை எல்லை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியும் அவர் முன்னேறி இந்திய எல்லைக்குள் ,நுழைய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கையாக, எல்லையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் ஊடுருவ முயன்றால் துப்பாக்கியால் சுட அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க