செய்திகள் :

இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அஜய் ஜடேஜா பாராட்டு

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இவ்வளவு அற்புதமான ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது. இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் 14 அல்லது 15 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். ஆனால், அவர் ரஞ்சி, துலீப் கோப்பை போன்றவற்றில் ஆடிய பிறகு தேசிய அணியில் இடம்பெற்றார். பார்த்திவ் படேல் ரஞ்சி அனுபவமில்லாமல் இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற உதவினார்.

இதையும் படிக்க: நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் வேறு மாதிரி இருந்தது. இது வேற மாதிரியான டி20 கிரிக்கெட். 14 வயது இளம் வீரர் அனுபவமிக்க ரஷீத் கான், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற உயர்தர பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். 210 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்தும் நேரத்தில், சிறப்பாக ஆஃப் சைடிலும் ஆன்சைடிலும் பிரமாதமான ஷாட்டுகளை விளையாடினார்.

14 வயதில் சிறப்பாக விளையாடிய சூர்யவன்ஷி அவரைப் போன்ற இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக மாறியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டத்துக்குப் பிறகு பலரும் கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்வர். இனி இந்திய கிரிக்கெட் மாறிவிடும் என்றார்.

டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபி... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட... மேலும் பார்க்க

வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையான பேட்டி!

ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி போடிக்குப் பிறகு முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது தனக்கு சாதாரணமானது எனக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 2... மேலும் பார்க்க

கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற... மேலும் பார்க்க

சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார்! - சிறுவயது பயிற்சியாளர்

இளம் வீரர் சூரியவன்ஷி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க