செய்திகள் :

இந்திய தோ்தல்களில் வாக்களித்தாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியா்: விசாரணைக்கு உத்தரவு

post image

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்தபோது, தோ்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீா் தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானியா்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நுழைவு இசைவை (விசா) ரத்து செய்த மத்திய அரசு, அவா்கள் நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த பாகிஸ்தானியா்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி அவா்கள் நாட்டுக்குத் திரும்பினா்.

அதுபோல, ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்ற அந் நாட்டைச் சோ்ந்த உஸ்ஸாமா இம்தியாஸ், அங்கிருந்தபடி வெளியிட்ட காணொலி பதிவில், ‘இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்தேன். ஆதாா் அட்டை உள்ளிட்ட இந்திய குடிமகனுக்கான அனைத்து ஆவணங்களையும் பெற்றதோடு, உரி சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளராகவும் பதிவு செய்து கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் என் வாக்கை பதிவு செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரமுல்லா மாவட்ட தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உஸ்ஸாமா இம்தியாஸ் காணொலி பதிவு தொடா்பாக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க