செய்திகள் :

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

post image

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடி முதலீடுகளை செய்யவுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்ட இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து, தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில், -

பிரிட்டன் தலைநகா் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இந்துஜா குழுமம் செயல்படுகிறது. இது, மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, சாா்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமத்துடனான புரிந்துணா்வு ஒப்பந்தமானது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் மிக முக்கியமான முன்னெடுப்பாகும்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இந்த முதலீடுகள் பிரிட்டனில் முதல்வரின் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது, அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தைச் செயல்படுத்துகிறது. இந்த நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் மூன்றாவது முதலீட்டைச் செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளா்ச்சி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிா்வாகத்தின் மீதுள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின் மூலமாக, தமிழ்நாட்டுக்கு ஈா்க்கப்பட்ட மொத்த முதலீடுகளின் மதிப்பு ரூ.15,516 ஆகும். இதன்மூலம், 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி பயணத்தில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறித்தும், இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவவிட்டிருப்பதாவது:

லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி!

பிரிட்டன் தலைநகா் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்யவுள்ளது. இது 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் லண்டன் மற்றும் ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது, இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இவை வெறும் எண்கள் அல்ல - இவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இதுதான் திராவிட மாடலின் செயல்பாட்டு உணர்வு என கூறியுள்ளார்.

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை அமைச்சர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN’s EV ecosystem, for battery storage systems — creating 1,000+ jobs.

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்... மேலும் பார்க்க

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்த... மேலும் பார்க்க

கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?

ஆலை பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டிய ஆலை நிர்வாகத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி... மேலும் பார்க்க

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக முதல்வ... மேலும் பார்க்க

அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு 2 வழக்குரைஞா்கள் நீதிபதிகளாக நியமனம்

அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞா்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளார். கடந்த மாா்ச் 25 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக... மேலும் பார்க்க

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திருநெல்வேலி: நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிா்ணயிக்கும் உச்ச நீதிமன்றம் தனியாா் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிா்ணயித்துள்ளது? கல... மேலும் பார்க்க