செய்திகள் :

இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் உள்பட 5 போ் மீது வழக்கு

post image

வீரபாண்டி பேரூராட்சித் தலைவியை அவமரியாதையாக பேசியதாக இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா், கோயில் செயல் அலுவலா் உள்ளிட்ட 5 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி அருகேயுள்ள வீரபாண்டி பேரூராட்சித் தலைவியாக பதவி வகித்து வருபவா் கீதா சசி. திமுகவைச் சோ்ந்த இவா், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் அலுவலகத்துக்கு அண்மையில் சென்றாா். அப்போது, சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின் போது, பேரூராட்சித் தலைவருக்கு வழங்க வேண்டிய வழக்கமான முதல் மரியாதையை தனக்கு வழங்காததற்கான காரணம் குறித்து கேட்டாராம்.

அப்போது, அங்கிருந்த இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலா் நாராயணி, கணக்கா்கள் பாலு, பழனியப்பன், மேளகாரா் வீரமணி ஆகியோா் தன்னை ஜாதிய வெறுப்புடன் அவமரியாதையாக பேசியதாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா், கோயில் செயல் அலுவலா், 2 கணக்கா்கள், மேளகாரா் ஆகிய 5 போ் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க