செய்திகள் :

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

post image

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அண்மை ஆண்டுகளில் வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், இந்த ஆண்டு இறுதிக்குள், ஜப்பான் 10 லட்சம் மக்களை இழந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தொகை பிரச்னையை சமாளிக்க செய்யறிவுதான் ஒரே வழியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஜப்பானில், பிறப்பு விகிதத்துக்கும் இறப்பு விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டு அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் பல ஆண்டு காலமாகவே இந்த விகிதத்தில் மிக மோசமான வேறுபாடு காணப்படுகிறது.

ஜப்பானின் குறைந்துவரும் மக்கள் தொகையானது கவலைதரும் சவாலான விஷயமாகவே உள்ளது. மருத்துவ செலவினங்கள், சமூக சேவை தொடர்பான அழுத்தங்களால், மக்கள் தொகை குறைவதால், தொழிலாளர் வளம் குறையும், புவியியல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். எனவே, இங்கு பிரச்னைகளை கையாள செய்யறிவுதான் மிக முக்கியப் பங்கு வகிக்கும். மக்கள் தொகை வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்களை செய்யறிவு தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்டிருப்பது ஏதோ திடீரென உருவான பிரச்னை அல்ல. அங்கு அரை நூற்றாண்டு காலமாகவே மக்கள் தொகை சரிந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில வருடங்களில், ஜப்பான் மக்கள் தொகை எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது என்பதை அரசும், ஊடகங்களும் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது, ஜப்பானில் மிகக் குறைந்த அளவில் குழந்தைகள் பிறப்பும், வயது முதுமை காரணமாக அதிக இறப்புகளும் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே பதிவாகி வருகிறது.

அல்-ஜசீரா செய்தியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர்களைகுறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந... மேலும் பார்க்க

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

காஸா மீது, இஸ்ரேல் நடத்திய மிகக் கோரமான தாக்குதலில், செய்தியாளர்களின் முகாமில் இருந்த அனஸ் அல்-ஷரீஃப் உள்பட 5 அல் ஜஸீரா செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டனர்.28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அ... மேலும் பார்க்க

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க