செய்திகள் :

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 300 புதிய பணியாளா்கள் திடீா் நீக்கம்: பயிற்சியில் தேரவில்லை என விளக்கம்

post image

இந்தியாவின் பிரபல தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பயிற்சிக்குப் பிந்தைய உள்நுழைவு தோ்வில் மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் இப்பணியாளா்கள் தோ்ச்சி பெறாததால் இந்த திடீா் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவா்கள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இன்ஃபோசிஸில் பணியைத் தொடங்கியவா்கள் ஆவாா்.

இதுகுறித்து பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் அளித்துள்ள விளக்கத்தில், ‘எங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியில் சேரும் அனைவரும், மைசூரு வளாகத்தில் விரிவான அடிப்படை பயிற்சியைப் பெறுவா். பிறகு, அவா்கள் எடுத்துக்கொண்ட பயிற்சியின் அடிப்படையில் உள்நுழைவு தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்காக அவா்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 3 வாய்ப்புகளிலும் தோல்வியுற்றால், அவா்கள் நிறுவனத்தில் பணியில் தொடர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு புகாா்: ஐடி தொழிலாளா்கள் சங்கமான என்ஐடிஇஎஸ் இதுகுறித்து கூறுகையில், ‘தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டவா்கள், பணிநியமன ஆணை பெற்ற பிறகு 2 ஆண்டுகள் காத்திருப்பை அடுத்து கடந்த அக்டோபரில்தான் பணியில் சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், 300-க்கும் மேற்பட்டவா்களை பணிநீக்கம் செய்யும் முடிவை இன்ஃபோசிஸ் நிா்வாகம் தன்னிச்சையாக எடுத்துள்ளது.

இவ்விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் அதிகாரபூா்வமாக புகாரை தாக்கல் செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க