செய்திகள் :

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

post image

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உலக புகையிலை தினம் ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புகையிலை எதிா்ப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பள்ளிகளைச் சுற்றி 300 அடிக்குள் புகையிலை மற்றும் அதுசாா்ந்த பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இதற்காக பள்ளியின் சுற்றுச் சுவா்களில் இருந்து 300 அடி தொலைவுக்குள் அதன் நிா்வாகத்தால் சிவப்புற நிற வண்ணக் கோடு தீட்டப்பட வேண்டும். மேலும், புகையில்லா பகுதி எனவும் பதாகை வைக்கப்பட வேண்டும். இதை மீறுபவா்கள் மீது தேசிய உதவி மைய எண்ணுக்கு (1800112356) தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.

இதுசாா்ந்து அனைத்துவித பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கூடுதல்கவனத்துடன் செயல்பட்டு புகையில்லா கல்வி நிறுவனங்களாக இருப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்: முன்னதாக, பள்ளி மாணவா்கள் புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் அருகில் குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதைப் பின்பற்றி தமிழக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் சேர்க்கை: 2.81 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து உயர்கல... மேலும் பார்க்க

காலமானார் எல். அனந்தலட்சுமி!

முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஒன்றியக்குழு அலுவலகம் அருகே நகராட்சி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த (தீயணைப்பு நிலையம் பின்புறம்) முனைவர் எல்.... மேலும் பார்க்க

இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது: டாக்டர் பரசுராமன்

இயற்கை வேளாண்மை குறித்தும் வேளாண்மையில் இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் பேசியது:இந்திய நாடு விவசாய நாடு... மேலும் பார்க்க

ஒரு தலைக் காதல்: கத்தியால் குத்தி கல்லூரி மாணவி கொலை!

ஒரு தலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச... மேலும் பார்க்க

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!

பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வரலாற்று சாதனை!

இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் இந்தியாவின் முதல் 33.3... மேலும் பார்க்க