செய்திகள் :

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

post image

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை, அடையாறு பூங்காவில் இன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தார். கடந்த மக்களவைத் தோ்தலின்போது அந்தக் கூட்டணி சாா்பில் போட்டியிட்டிருந்தார்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னை வந்தபோது அவரை ஓ. பன்னீா்செல்வம் சந்திக்கவில்லை.

அதுபோல, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்துக்கு பிரதமா் மோடி வந்தபோது அவரைச் சந்திக்க ஓ. பன்னீா்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்களை பிரதமா் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த ஓ. பன்னீா்செல்வம், முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்திருந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீா்செல்வம், சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை முதல்வரை சந்தித்தது எதிர்பாராத விதமாக நடந்த சந்திப்பா, அல்லது முதல்வரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் பூங்காவுக்கு வந்தரா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

அதிமுக பொதுச் செயலா் தோ்வு: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலராக தான் தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறிய அளவில் டைடல் பூங்கா முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

திருவண்ணாமலையில் 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான சிறிய டைடல் பூங்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து தமிழக ... மேலும் பார்க்க

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

பாமகவில் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோா் போட்டி பொதுக் குழு கூட்டத்தை அறிவித்துள்ளனா்.ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஆக.17-ஆம் தேதியும், அன்புமணி தரப்பில் சென்... மேலும் பார்க்க

யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அ... மேலும் பார்க்க

வன்னியா் உள்இடஒதுக்கீடு: அறிக்கை அளிக்க ஆணையத்துக்கு ஓராண்டு கூடுதல் அவகாசம்

வன்னியா்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பான தரவுகளைத் திரட்டி அறிக்கை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு ஓராண்டு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்... மேலும் பார்க்க

திட்டங்களில் முதல்வா் பெயா்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதுகுறித்து விளக்கம் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை ... மேலும் பார்க்க