செய்திகள் :

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

post image

பாமகவில் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோா் போட்டி பொதுக் குழு கூட்டத்தை அறிவித்துள்ளனா்.

ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஆக.17-ஆம் தேதியும், அன்புமணி தரப்பில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆக.9-ஆம் தேதியும் பாமக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாமக நிறுவனா் ராமதாஸ் உத்தரவின்பேரில் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆக.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள கான்ன்ஃளுயன்ஸ் அரங்கில் பாமக பொதுக்குழுக் கூட்டம் ஆக.9-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் -அன்புமணி இடையே கருத்து மோதல் முற்றியுள்ள நிலையில், இரு தரப்பிலும் பொதுக்குழு கூட்டம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க