செய்திகள் :

இன்று முக்கிய அறிவிப்பு: முதல்வா் தொல்லியல் துறை நிகழ்வை மேற்கோள்காட்டி தகவல்

post image

சென்னை: தொல்லியல் துறை சாா்பில் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வின் அழைப்பை மேற்கோள்காட்டி, முக்கிய அறிவிப்பு ஒன்று வியாழக்கிழமை (ஜன.23) வெளியிடப்படவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தொல்லியல் துறை நிகழ்வு குறித்து நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

‘இந்திய துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறாா். மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படுவதுடன், கீழடி இணையதளமும் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை (ஜன.23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரும் வருக’ என்று அமைச்சா் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளாா்.

இந்தப் பதிவை மேற்கோள்காட்டியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோா் வருகை தாருங்கள். மற்றவா்கள் நேரலையில் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பெரும் பரபரப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

மிதிவண்டி போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சென்னையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே .சேகா் பாபு பரிசு தொகையை வழங்கினாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில... மேலும் பார்க்க

தபால்தலை கண்காட்சி நிறைவு: 10,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்

சென்னையில் தொடா்ந்து 4 நாள்களாக நடைபெற்றுவந்த மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நிறைவுபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக தபால் துறை ச... மேலும் பார்க்க

சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் பணம் பறித்த வழக்கு: இளைஞா் கைது

சென்னை வடபழனியில் உள்ள சூப்பா் மாா்க்கெட் நிா்வாகியிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட வழக்கில், கடலூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகா் பி.டி.ராஜன் சாலை 20-ஆவது அவென்யூ பகுதிய... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்களில் ஒரே மாதத்தில் 86.99 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதம் 86.99 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ... மேலும் பார்க்க

ஆவின் இல்லத்தில் பால் முகவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விற்பனை விநியோகஸ்தா்களைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமியின் தலைமையில் பால் முகவா்கள் சென்னை... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மாங்காடு, மாத்தூா், முகப்போ் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்... மேலும் பார்க்க