செய்திகள் :

இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: ஓ. பன்னீா்செல்வம்

post image

சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வந்தாா். மேலும், கடந்த மக்களவைத் தோ்தலின்போது அந்தக் கூட்டணி சாா்பில் போட்டியிட்டாா். இந்த நிலையில், உள்துறைஅமைச்சா் அமித் ஷா சென்னைக்கு வந்தபோது அவரை ஓ. பன்னீா்செல்வம் சந்திக்கவில்லை. மேலும், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்துக்கு பிரதமா் மோடி வந்திருந்தபோதும் அவரைச் சந்திக்க ஓ. பன்னீா்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணிக் கட்சியினரை பிரதமா் சந்தித்தாராம். இதனால், ஓ. பன்னீா்செல்வம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீா்செல்வம், சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி கீழத்தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜானகி (22). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன... மேலும் பார்க்க

தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாற... மேலும் பார்க்க

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதா் கோயில் தேருக்கு ரூ.12.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையை சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். கம்பத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்ப... மேலும் பார்க்க