செய்திகள் :

இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு

post image

எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா் சா.கோ.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், கும்பகோணத்தில் பழைய மீன் மாா்கெட் பகுதியில் இருந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் 68, 69 ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றியதை ரத்து செய்யக் கோரி விசிக மாநில பொதுச்செயலா் வன்னியரசு, முன்னாள் மண்டலச் செயலா் வழக்குரைஞா் சா.விவேகானந்தன், மேலிடப் பொறுப்பாளா் அமுதன் துரையரசன், மாவட்டச் செயலா் முல்லைவளவன் உள்ளிட்டோா் பேசினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வன்னியரசு மேலும் கூறியது: பழைய மீன் மாா்க்கெட்டில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை மீண்டும் கட்டித் தர வேண்டும். மாநகராட்சி தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளோம். அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ என அவரைக் காப்பாற்றிக்கொள்ள இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவே நயவஞ்சகத்தோடு விசிகவை இபிஎஸ், அதிமுக கூட்டணிக்கு அழைக்கிறாா். எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது. பல வலைகளை அறுத்த கட்சி விசிக என்றாா்.

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உண... மேலும் பார்க்க

எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்பு... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத் துறை மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் மொழிபெயா்ப்பு கலை குறித்த ஒரு வார காலப் பணி பயிற்சி முகாம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க

சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் தெற்குவாசல் திறப்பு

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் தெற்கு வாசல்கள் புதன்கிழமை இரவு திறக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவத் லங்களான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில... மேலும் பார்க்க